‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
லண்டனில் நடைபெற்று வரும் இந்திய திரைப்பட விழாவில் மணிரத்னத்திற்கு 'ஐகான்' விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விழாவில் மணிரத்னம் இயக்கி அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா நடித்த 'பாம்பே' படம் திரையிடப்பட்டது. படம் திரையிட்டதற்குப் பின் மணிரத்னம் சிறப்புரையாற்றினார். அப்போது அங்கிருந்த திரைப்படப் பிரமுகர்கள், ரசிகர்கள் முன் உரையாற்றினார். இந்திய சினிமாவைப் பற்றியும், அவருடைய திரையுலக வாழ்க்கை மற்றும் அவர் இணைந்து பணியாற்றிய நட்சத்திரங்களைப் பற்றியும் பேசியுள்ளார்.
மணிரத்னத்துடன் அவருடைய மனைவி சுஹாசினியும் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அது பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும் தன்னுடைய டிவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட சுஹாசினி கூடவே 'காக்கா முட்டை' படத்தைப் பற்றியும் ஒரு பதிவிட்டிருக்கிறார். “லண்டன் திரைப்பட விழாவில் நேற்றுதான் 'காக்கா முட்டை' படத்தைப் பார்த்தேன். அற்புதமான படம், இளம் திறமைசாலிகள் தமிழ் சினிமாவில் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார்.