அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
அரசியல் தேர்தல் களத்தை விட படு சூடு பிடித்திருக்கிறது நடிகர் சங்க தேர்தல். இந்த சரத்குமார்-ராதாரவி தலைமையிலான மூத்த நடிகர்கள் அணிக்கும், விஷால்-கார்த்தி-ஆர்யா உள்ளிட்டோர்களின் தலைமையிலான இளம் நடிகர்கள் அணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. ஜூலை 17ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் விஷால் தரப்பு தொடர்ந்த வழக்கால், நீதிமன்றத்தால் அந்த தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
தேர்தல் எப்போது என்று தெரியவில்லை என்றாலும், தேர்தல் களத்தில் விஷால் அணியினரும், சரத்குமார் அணியினரும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு ஊராக சென்று நாடக நடிகர்களின் ஆதரவை இரு அணியினரும் பெற்று வருகின்றனர்.
இதனிடையே விஷால் அணியில், ஆர்யா, கார்த்தி உள்ளிட்ட இளம் நடிகர்கள் தலைமையிலான அணியினர் போட்டியிட உள்ளனர். இதனால் சரத்குமார் இவர்களை சமாளிக்கும் விதமாக சிம்பு மற்றும் தனுஷை தனது அணியில் களம் இறக்கிவிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி நாடக சங்க செயலாளராக இருக்கும் மஸ்தானும் இதே தகவலை சொல்லியிருக்கிறார். அதுமட்டுமின்றி, நாமக்கலில் நடந்த நாடக நடிகர் சங்க கூட்டத்தில், சிம்பு, தனுஷ் போட்டியிடுவதை நாங்கள் வரவேற்கிறோம் என்று விஷாலும் கூறியிருக்கிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது சரத்குமார் அணியில், சிம்பு, தனுஷ் கண்டிப்பாக போட்டியிடுவார்கள் என தெரிகிறது. ஆக இந்தாண்டு நடிகர் சங்க தேர்தல், அரசியல் தேர்தல களத்தை விட சூடு பறக்கும் என்பது உறுதி.
அதேசமயம் மூத்த நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் போன்றோர்கள் இந்த விஷயத்தில், இதுவரை வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது ஏன் என்பது தெரியவில்லை.?!