இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிசாசு படத்தில் அதன் கதாநாயகியாக நடித்த பிரயாகாவை அந்தரத்தில் ரோப் கட்டியெல்லாம் தூக்கினார்கள். அதனையெல்லாம் கேள்விப்பட்டும் கூட மிஷ்கின் படத்தில் ஹீரோயினாக நடிக்க பூர்ணாவை அனுகியதுமே தயங்காமல் ஓகே சொல்லியுள்ளார் பூர்ணா என்கிற ஷாம்னா காசிம். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் படத்தின் கதை மட்டுமே மிஷ்கின். படத்தை இயக்குவது அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஆதித்யா.
இதில் பியூட்டி என்னவென்றால் இந்த கேரக்டரில் நடிக்க கேட்டு ஏற்கனவே ஆறு கதாநாயகிகளை பார்த்து, அவர்க ஆளைவிடுங்க சாமி என கும்பிடு போட்டு ஒதுங்கிக்கொண்ட கொஞ்சம் வில்லங்கமான கேரக்டர் தான் அது. ஆம்.. சென்னை பின்னணியில் மிஷ்கின் இயக்கிவரும் க்ரைம் த்ரில்லரான 'சவரக்கத்தி' படத்தில் இனியா தான் கதாநாயகி. கதாநாயகனாக 'தங்க மீன்கள்' ராம் நடிக்கிறார். வில்லனாக மிஷ்கின் நடிக்கிறார்.
சரி அப்படி என்ன விவகாரமான கேரக்டர் என்றால் அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார் பூர்ணா.. “ஆறுபேர் வேண்டாம் என சொன்ன கேரக்டர் என்பதாலேயே அதில் ஆர்வம் வந்துவிட்டது. அவர்கள் இதை ஏன் வேண்டாம் என ஒதுக்கினார்கள் என்பதும் இயக்குனருக்கு அந்த கேரக்டர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகம் என்பதும் நன்றாகவே தெரிந்தது. அதனாலேயே நான் இதை ஏற்க ஒப்புக்கொண்டேன்.. இந்த கேரக்டர் எனக்கு கிடக்க காரணமாக இருந்த அந்த ஆறு பேருக்கு நன்றி..” என நன்றி ராகம் பாடுகிறார் பூர்ணா.