திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
நாமக்கல்: பதவிக்கு வந்தால் தான், நடிகர்கள், நாடக கலைஞர்களுக்கு நல்லது செய்ய முடியும், என, நாமக்கல்லில், நடிகர் விஷால் பேசினார்.
நாமக்கல்லில் நாடக நடிகர் சங்கத்தினர் சார்பில், கலை குடும்ப சந்திப்பு விழா நடந்தது. இதில், நடிகர் நாசர் பேசுகையில், தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம், ஏன் இடிந்துள்ளது என, 2013ல் இருந்து, தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக கேட்டு வருகிறோம்; பதில் இல்லை. தேர்தலில் நின்று வெற்றி பெற்று, அங்குள்ள குப்பைகளை அகற்றுவோம், என்றார்.
நடிகர் விஷால் பேசியதாவது:சக நடிகர்களான உங்களுக்கும், எங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் சம்பளம். நாடக நடிகர்கள் இல்லை என்றால், நடிகர் சங்கம் இல்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்தில், ஊழல், முறைகேடு பெரிய அளவில் நடந்துள்ளது. நாங்கள், இங்கு ஓட்டு கேட்க வரவில்லை. சக நடிகர்களிடம் பேசி, கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வந்துள்ளோம். இதற்கு, தடை விதிக்க முடியாது. நாங்கள் தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். பதவிக்கு வந்தால் தான், நடிகர்களுக்கும், நாடக கலைஞர்களுக்கும் நல்லது செய்ய முடியும்.
இவ்வாறு, விஷால் பேசினார்.