வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ராட்டினம், ஒருவர் மீது இருவர் சாய்ந்து போன்ற படங்களில் ஹீரோவக நடித்தவர் லகுபரன். இவர் தற்போது கமலின் நடித்து வரும் ''தூங்காவனம்'' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இதுப்பற்றி லகுபரன் கூறியதாவது...
கமல் நடித்து வரும் தூங்காவனம் படத்தில் பணியாற்ற உதவி இயக்குநர் தேவை என்று விளம்பரம் வந்தது. நானும் எனது பயோ-டேட்டாவை அனுப்பி வைத்தேன். தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் வரச்சொன்னார். நானும் போனேன், பிறகு இரண்டு நாள் கழித்து வந்து உதவி இயக்குநராக சேரும்படி சொன்னார். நானும் சேர்ந்து பணியாற்ற துவங்கினேன்.
கமல் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப்படம் ஆரம்பித்ததில் இருந்து அவரை அருகில் நின்று அவரது நடிப்பை ரசித்தேன். கூடவே நான் ஒரு நடிகன் என்பதால் அவரை பார்த்து நிறைய விஷயங்கள் கற்று கொண்டேன். இந்தப்படம் எனக்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் உள்ளது.
தற்போது என்னிடம் இரண்டு - மூன்று கதைகள் உள்ளன. நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக படம் இயக்குவேன். நடிப்பு ஒரு பக்கம், இயக்கம் ஒரு பக்கம் என இரண்டிலும் கவனம் செலுத்த உள்ளேன். எந்த வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்தி கொள்வேன். தூங்காவனம் படம் முடிந்தபிறகு நான் நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்று ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது.
இவ்வாறு லகுபரன் கூறினார்.