டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காமெடி நடிகராக நடித்துக் கொண்டிருந்த சந்தானத்துக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்தபோது, அவருக்கு உற்சாகமூட்டியவர்களில் மறைந்த இயக்குநர் ராமநாராயணும் ஒருவர். அது மட்டுமல்ல, எடுத்த எடுப்பிலேயே ஹீரோவாக நடிப்பதைவிட டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்து ரசிகர்களின் பல்ஸ் பார்த்து அடுத்த படத்தில் ஸோலோ ஹீரோவாக நடிப்பது நல்லது என்று அட்வைஸும் செய்தாராம். அதை வேதவாக்காக எடுத்துக்கொண்ட சந்தானம், சேது என்பவரை ஹீரோவாக வைத்துக் கொண்டு அவருக்கு நிகரான வேடத்தை தனக்கு ஒதுக்கிக்கொண்டு ஆரம்பித்த படம்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா. சந்தானம் இந்தப்படத்தைத் தயாரித்தபோது அவருக்கு சினிமா வியாபாரம் கொஞ்சமும் தெரியாது. எனவே ராமநாராயணனை அணுகினார். அவரது வேண்டுகோளை தட்ட முடியாமல் தானே தயாரிக்கும் படம்போல் எல்லாவகையிலும் உடனிருந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைத் தயாரித்துக் கொடுத்ததோடு, அந்தப் படத்தை உலகம் முழுக்க வெளியிடவும் செய்தார்.