ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜீத், நயன்தாரா, நமீதா நடிப்பில் டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்த "பில்லா" படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து மீண்டும் அதேகூட்டணியை வைத்து "பில்லா-2" படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தனர். இந்தபடத்தையும் டைரக்டர் விஷ்ணுவர்தனே இயக்க இருப்பதாக இருந்தது. மறைந்த பழம்பெரும் நடிகர் பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பதாக இருந்தது. இந்நிலையில் பில்லா-2வில் இருந்து டைரக்டர் விஷ்ணுவர்தன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து விஷ்ணுவர்தன் கூறுகையில், ஏப்ரலில் "பில்லா-2" ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் நான் தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் தி ஷேடோ படத்தை இயக்கி வருகிறேன். இந்தசூழலில் பில்லா-2 வையும் இயக்கினால் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். ஆகையால், நானே முன்வந்து இந்தபடத்திலிருந்து விலகுகிறேன். இவ்வளவு பெரிய படத்திலிருந்து விலகுவது மிகுந்த கவலையளிக்கிறது. என்றார்.
இதனிடையே விஷ்ணுவர்தன் விலகலுக்கு இதுகாரணம் இல்லையாம். பில்லா-2 துவங்க இன்னும் நாளாகும் என்றும், அதுமட்டும் இன்றி அஜீத்தை மங்காத்தா படத்தை முடிக்க இன்னும் இரண்டு மாதம் ஆகும் என்றும், அதன்பின்னர் அஜீத் ஆறுமாதகால ஓய்வுக்கு பின்னர்தான் புதியபடம் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.