வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடிப்பதற்கு முன்பு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு வந்தவர் விஷ்ணு. ஆனால் ஒருமுறை விளையாடும்போது அவரது காலில் பலத்த அடிபட்டதால், இனிமேல் கிரிக்கெட் வேண்டாம் என்று சினிமா பக்கம் வந்தார்.
அப்படி அவர் சினிமாவில நடிக்க முயற்சி எடுத்து வந்தபோதே இப்போது அவருக்கு மனைவியாக இருக்கும் ரஜினியை காதலித்து வந்தாராம். அப்போது விஷ்ணு நடிக்க முயற்சி எடுத்தது ரஜினிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதனால் இவர் நடிகராக வேண்டும் என்று நினைக்க, அவரோ இவர் நடிகராகிவிடக்கூடாதுஎன்று நினைத்துக்கொண்டிருந்தாராம்.
ஆனால், விஷ்ணு எதிர்பார்த்தபடி வெண்ணிலா கபடிக்குழு படவாய்ப்பு கிடைத்தபோது அவர் ரஜினியிடம் சொன்னாராம். அதைக்கேட்டு ஷாக் ஆகி விட்டாராம். இருப்பினும் விஷ்ணுவை உயிருக்கு உயிராக காதலித்த அவரால் அவரை மறக்க முடியவில்லையாம். அதனால் பின்னர் தனது மனதை மாற்றிக்கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டாராம். அதோடு, இப்போது அவர் நடிப்பதை சகஜமாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு ரொம்பவே மாறி விட்டாராம்.
இப்படி சொல்லும் விஷ்ணு, என் மனைவிக்கு என்னை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. ஆனால் அவர் எந்த கதை எழுதிக்கொண்டிருந்தாலும் அதே மாதிரியான டைப்பில் யாராவது டைரக்டர்கள் என்னிடம் கதை சொல்கிறார்கள்.
உதாரணத்திற்கு, ஜீவா படத்தில் நான் நடிப்பதற்கு முன்பு ஒரு கிரிக்கெட் கதையை என் மனைவி ரஜினி, எனக்காக எழுதிக்கொண்டிருந்தார். அப்போது பார்த்து ஒருநாள் என்னை தொடர்பு கொண்ட சுசீந்திரன் சார், விஷ்ணு ஒரு கிரிக்கெட் கதை இருக்கு பண்ணலாமா? என்றார். இந்த விசயத்தை என் மனைவியிடம் சொன்னபோது ரொம்ப ஷாக்காகி விட்டார். அதனால் அந்த கதை எழுதுவதை அத்தோடு நிறுத்தினார்.
ஆனபோதும் இப்போது வேறொரு கதையை எழுதிக்கொண்டிருக்கிறார். இந்த கதையை அவர் எழுதி முடித்து என்னை வைத்து படம் இயக்கும் வரை வேறு யாரும் டைரக்டர்கள் அதுபோன்ற கதையை சொல்லி விடக்கூடாது என்று ஆண்டவனை வேண்டிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் விஷ்ணு விஷால்.