தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தம்பி ராமைய்யாவின் நடிகர் மார்க்கெட் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இனிமே இப்படித்தான், கொம்பன் படங்களை அடுத்து யட்சன், புலி படங்களிலும் அவர் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய்யின் புலி படத்தில் மொத்தம் 60 நாட்கள் கால்சீட் கொடுத்து நடித்திருக்கிறார் தம்பி ராமைய்யா. வழக்கமாக விஜய்யின் படங்களில் சந்தானம், சூரி என யாராவது காமெடியன் இருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அவர்களுக்கு வேலை இல்லை. சூரியை நடிக்க வைக்க நினைத்தனர், ஆனால் அவரால் மொத்த கால்சீட்டாக கொடுக்க முடியவில்லை, 5 நாள் 10 நாள் என்று தருவதாக சொன்னதால் அவரை மறந்து விட்டு, தம்பி ராமைய்யாவிடம் பேசினர்.
விஜய் படம் என்பதால் 60 நாட்களை மொத்தமாக எண்ணிக்கொடுத்து நடித்தார். அதனால் அவருக்கு குணசித்ர வேடம் மட்டுமின்றி காமெடியும் கலந்த வேடம் கொடுத்திருக்கிறார் சிம்புதேவன். அதோடு, மெகா நடிகராகி விட்ட தம்பி ராமைய்யாவுக்கும் அந்த படத்தில் நடித்தபோது தனி கேரவன் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததாம். தன்னிடம் கதை சொல்ல வந்த டைரக்டர்களை அந்த கேரவனுக்குள் வைத்துதான் கதை கேட்டாராம் தம்பி ராமைய்யா. அதோடு இனிமேல் எனக்கு எல்லா படத்திலுமே இதுமாதிரி கேரவன் வசதி செய்து தரவேண்டும் என்பது போன்றும் மறைமுகமாக தெரிவித்தாராம் அவர்.