அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்திற்கு 'கோமாளி' என பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன. அந்தப் படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் சொன்னார்கள். இப்போது அவர்களுடன் நயன்தாராவும் நட்சத்திரங்களின் பட்டியலில் இணைந்துள்ளாராம். நயன்தாரா இதுவரை மணிரத்னம் இயக்கத்தில் நடித்து இல்லை. இதற்கு முன் 'ராவணன்' படத்தில் கூட பிரியாமணி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவைக் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டார் என்றும் செய்திகள் வந்தன.
இப்போது மணிரத்னம் குழுவினர் நயன்தாராவைச் சந்தித்து கதையைச் சொன்னதாகவும் கதையைக் கேட்டவுடனே படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். இப்படி படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன், நயன்தாரா என முக்கியமான நட்சத்திரங்கள் நடிப்பதன் மூலம் படத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மணிரத்னம் படம் என்றாலே இந்தியாவே திரும்பிப் பார்க்கும். அதோடு இந்த நட்சத்திரங்களும் படத்தில் நடிப்பதன் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் இந்தப் படம் மிகப் பெரிய வசூலை அள்ளவும் வாய்ப்பாக இருக்கும். மணிரத்னம் படத்தைப் பற்றி நாளுக்கு நாள் புதிய செய்திகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. அவராகவே அறிவிக்கும் வரை எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது என்பதும் உண்மை.