இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நாடக நடிகர்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் நாங்கள், எப்படி அவர்களை மிரட்டுவோம். எதிர் தரப்பினரின் மறைமுக தூண்டுதலில், எங்களை குறை கூற, சதி நடந்திருக்கலாம், என, நடிகர் நாசர் கூறினார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் அணியை எதிர்த்து போட்டியிட, விஷால், நாசர் அணியினர் முடிவு செய்துள்ளனர்.
மிரட்டல்:இந்நிலையில், நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்க தலைவர் ஆட்டோ ராஜா, போலீஸ் எஸ்.பி.,யிடம், விஷால் தரப்பினர் என்னை மிரட்டி ஆதரவு கேட்கின்றனர்; கொலை மிரட்டல் விடுகின்றனர். எனக்கும், என் குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, மனு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, நடிகர் நாசர் கூறியதாவது: நடிகர் சங்கம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என, நினைத்து தான் செயல்படுகிறோம்; சங்கத்தை உடைக்கும் எண்ணம் துளியும் கிடையாது. நாடக நடிகர்கள் நலனுக்காக, சரத்குமார் தலைமையிலான நிர்வாகம் சில திட்டங்களை அறிவித்தது. அவை எதையும் செயல்படுத்தவில்லை. அவை, முழுவதும் பயன் அளிக்கக்கூடிய திட்டமாகவும் இல்லை.
நாடக நடிகர்களுக்கு தேவையான திட்டங்களை உருவாக்கி, நல்லபடியாக செயல்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான், அவர்களின் ஆதரவை பெற முயன்று வருகிறோம்; யாரையும் மிரட்டவில்லை. இப்படி கீழ்த்தரமான எண்ணம் எங்கள் யாருக்கும் இல்லை; சக கலைஞனை எப்படி நாங்கள் மிரட்டுவோம்.
எதிர்கொள்வோம்:போலீஸ் எஸ்.பி.,யிடம், ஒருவர் புகார் கொடுக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார் என்றால், அது அவராக சென்றிருக்க மாட்டார். எதிர் தரப்பினரின் துாண்டுதலில் தான் சென்று இருக்க வேண்டும்.
புகார் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. நாங்கள் எதற்கும் பயப்படுபவர்கள் அல்ல; எதுவாக இருந்தாலும், எதிர்கொள்வோம். நாளை நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தினரை சந்திக்க செல்கிறோம். அப்போது, உண்மை நிலை தெரியும்.இவ்வாறு, நாசர் கூறினார்.
நடிகர்கள் விஷால், நாசர், கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் சேலம், நாமக்கல், திருச்சி, நாடக நடிகர் சங்கத்தினரை சந்தித்து ஆதரவு திரட்ட, சென்னையில் இருந்து நேற்று மதியம் புறப்பட்டு சென்றனர்.
நடிகர் விஷால் மீது வழக்கு:நாமக்கல் நாடக நடிகர் சங்கத் தலைவர் ராஜா, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:நடிகர் சங்கத் தேர்தல் நடத்தக்கூடாது என, வழக்கு தொடர்ந்த விஷால், மாவட்டந்தோறும் சென்று, நாடக நடிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.
நாமக்கல் மாவட்டத்துக்கு வரும் விஷால், நாமக்கல் நாடக நடிகர் சங்க பெயரை பயன்படுத்தி, ஓட்டு கேட்கக் கூடாது. மீறி பயன்படுத்தினால், விஷால் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். விஷால் எந்தப்பதவிக்கு போட்டியிடுகிறாரோ, அந்த பதவிக்கு, ராதாரவி என்னை நிறுத்தினால், போட்டியிடத் தயார். இவ்வாறு, அவர் கூறினார்.