சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
எந்திரன் படத்தை ரஜினி-ஐஸ்வர்யாராயை வைத்து இயக்கினார் ஷங்கர். ஹாலிவுட் தரத்தில் உருவான அப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது. அதையடுத்து விக்ரமை வைத்து ஐ படத்தையும் பிரமாண்டமாக இயக்கினார். இந்நிலையில், எந்திரன்-2 படத்தை இயக்கும் வேலைகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். தனது பிரமாண்டத்துக்குப்போட்டியாக வருவது போன்று ராஜமவுலியின் பாகுபலி ரூ. 250கோடியில் உருவாகியிருப்பதை அடுத்து, ஷங்கரின் எந்திரன்-2வும் ரூ. 250கோடியில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் பல முக்கிய மொழிகளிலும் அப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ள ஷங்கர், எந்திரன்-2விலும் ரஜினிதான் ஹீரோ என்பதை ஏற்கனவே முடிவு செய்துவிட்டார். ஆனால், வில்லனாக யாரை நடிக்க வைப்பது என்பதில்தான் ஆரம்பத்தில் இருந்தே குழப்பம் நீடித்து வருகிறது.