ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. தொடர்ந்து நீர்ப்பறவை படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அவர் நடிப்பில் வௌிவந்த முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை போன்ற படங்கள் ஹிட் அடித்து உள்ளன. இதனால் உற்சாகத்தில் இருக்கும் விஷ்ணு, தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வெற்றி பெற உழைத்து வருகிறார்.
இந்நிலையில், விஷ்ணு விஷால் நேற்று தனது பிறந்தநாளை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கொண்டாடியதோடு, பத்திரிகையாளர்களுக்கும் நன்றியும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது...
எனது உண்மையான பெயர் விஷால். நான் சினிமாவில் என்ட்ரி ஆனபோதே ஏற்கனவே விஷால் என்ற ஒரு நடிகர் பிரபலமாக இருந்தார். அதனால் எனது பெயரை விஷ்ணு என்று மாற்றினேன். பின்னர் எனது பெயரையும் அதனூடன் சேர்த்து கொண்டால் நன்றாக இருக்குமே என்று எண்ணினேன். அதன்பின்னர் தான் விஷ்ணு விஷால் என்று மாற்றி வைத்து கொண்டேன். என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. கூடவே என்னை வைத்து படங்கள் தயாரித்த அத்தனை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
நான் இன்னும் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்கவில்லை. ஆனால் இப்போது இந்தளவுக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் பத்திரிகையாளர்களாகிய நீங்களும் தான். இப்பவும் நான் என் படம் தொடர்பான விமர்சனங்கள் எப்படி வந்துள்ளது என்று பிடித்து வருகிறேன். நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அதை ஏற்று கொள்கிறேன்.
மேலும் இவர்களோடு எனது நண்பர்களாகிய ஆர்யா, விஷால், விக்ராந்த் ஆகியோருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு பக்க பலமாக அவர்கள் இருந்துள்ளனர். விஷால் எனது அண்ணன் போன்றவர். எனக்கு ஒரு பிரச்னை என்றால் கண்டிப்பாக அவர் முதல் ஆளாக வந்து நிற்பார். அந்தளவுக்கு அவருடன் நான் பழகி உள்ளேன். அவரைப்போலத்தான் ஆர்யா, விக்ராந்த் போன்றவர்களும்.
இவ்வாறு விஷ்ணு விஷால் கூறினார்.