ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்றைக்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் மூலமாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் சாதாரண போட்டியாளராகக் கலந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வெளிப்படுத்தி அந்த நிகழ்ச்சியின் வின்னராகவும் வெற்றி பெற்றார். அதன் பின் 'அது இது எது' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பணியை ஏற்று அவருடைய தனித் திறமையின் மூலம் அந்த நிகழ்ச்சியைப் பற்றி அதிகமாகவே பேச வைத்தார்.
அடுத்து '3' படத்தில் ஒரு நண்பர் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, 'மெரினா' படத்தில் நாயகனாக உயர்ந்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மாபெரும் வெற்றியாலும், தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்ததாலும் இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவருடைய 'ரஜினி முருகன்' மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் விரைவில் வெளிவர உள்ளது.
தன்னை அறிமுகப்படுத்தியவர்களையும், வளர்த்து விட்டவர்களையும் மறக்கும் இந்தத் திரையுலகத்தில் தன்னை அறிமுகப்படுத்திய, வளர்த்து விட்ட விஜய் டிவியை மறக்காமல் அவர்களுக்காக ஒரு புதிய விஷயத்தை செய்து கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் நாளை முதல் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி புதுப் பொலிவுடன் ஆரம்பமாக உள்ளது. தான் அறிமுகமான அந்த நிகழ்ச்சியை இப்போது பிரபலப்படுத்த அந்த நிகழ்ச்சியின் புரோமோவில் நடித்துக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.