டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கார்த்தியும், மம்முட்டியும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற ஒரு தகவலும், கார்த்தியும், துல்கல் சல்மானும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற மற்றொரு தகவலும் கோலிவுட்டில் பரவி வருகிறது. நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்றும் சொன்னார்கள். மகேஷ்பாபு, நாகார்ஜுனா நடிக்கப் போவதாக இருந்த படத்தில்தான் இப்போது இவர்கள் நடிக்கப் போகிறார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் அது பற்றி வாயே திறக்கவில்லை.
'ஓ காதல் கண்மணி' படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியுடன் இருக்கும் மணிரத்னம் விரைவில் புதிய படத்தை ஆரம்பித்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் என்பது மட்டும் உறுதி என்கிறார்கள். இதற்கான கதையைக் கூட அவர் ஏற்கெனவே தயார் செய்து விட்டாராம். இந்தப் படத்திற்கு 'கோமாளி' என்ற பெயரிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மணிரத்னம் படத்தைப் பொறுத்தவரையில் ஒரு புகைப்படம் வெளிவருவது கூட சிதம்பர ரகசியமாகவே இருக்கும். அவர் படம் பற்றி தகவல் கசியும் அனைத்து வழிகளையும் அவர் இரும்புக்கரம் கொண்டு தடுத்து வைத்திருப்பார்.
எப்படியும் சீக்கிரம் அறிவிப்பு வரும் என்று மட்டும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.