‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில், சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், நடிகர்கள் சார்லி முன், நடிகர் கமல்ஹாசனை, நடிகர் ராதாரவி ஒருமையில் வசை பாடியது, கமல் ரசிர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், நடிகர் சங்க தேர்தலில், நடிகர் விஷால் அணிக்கு, கமல் ரசிகர்கள் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளனர்.திரைப்பட நடிகர்களுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் இருப்பதை போல், சின்னத்திரை நடிகர்களுக்கும் தனி சங்கம் உள்ளது. இதன் தற்போதைய தலைவர், நடிகை நளினி.சின்னத்திரை நடிகர் சங்கம் தொடர்பாக, முக்கிய முடிவு எடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில், நளினி தலைமையில் நடந்தது.அதில் பங்கேற்கச் சென்ற சின்னத்திரை நடிகர், நடிகையருக்கு அதிர்ச்சி. காரணம், அங்கு திரைப்பட நடிகர்கள் ராதாரவி, சார்லி ஆகியோர் இருந்தனர். சின்னத்திரை நடிகர் சங்கக் கூட்டத்திற்கு, இவர்கள் ஏன் வந்தனர் என்ற கேள்வி எழுந்தது.சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உள்ள ஆயிரம் உறுப்பினர்களில், 330 பேர், திரைப்பட நடிகர் சங்க உறுப்பினராகவும் உள்ளனர். எனவே, அந்த, 330 பேரின் ஆதரவு கேட்க, திரைப்பட நடிகர்கள் வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.கூட்டத்தில், ராதாரவி, கமலை ஒருமையில் பேசி, அவரை கடுமையாக விமர்சித்தார். இது சின்னத்திரை நடிகர்களுக்கு, பெரும் அதிர்ச்சியை அளித்தது; சிலர் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து, கோலிவுட் வட்டாரங்கள் கூறியதாவது:ஏற்கனவே, திருச்சியில், நலிந்த நாடக நடிகர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், நாசர் உட்பட சில நடிகர்களை தரக்குறைவாக பேசி, ராதாரவி பரபரப்பை உருவாக்கினார். நடிகர் சங்க கட்டட விவகாரத்தில், வெள்ளை அறிக்கை கேட்ட மனுவில், கமல் முதல் கையெழுத்திட்டார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் சங்கம் பிரச்னை குறித்து, என்னிடம் எந்த கருத்தும் யாரும் கேட்கவில்லை என, கூறியிருந்தார்.இதற்கு ராதாரவி, சின்னத்திரை நடிகர் சங்கக் கூட்டத்தில், நான் அறிவாளியிடம் தான் கருத்து கேட்பேன்; கமலுக்கு நான் செய்த உதவியை மறந்து விட்டார் என, ஒருமையில் பேசினார். இது, கமல் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டடு உள்ளது. கமல் என்ன முடிவு எடுக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு, சக நடிகர்களிடம் உருவாகி உள்ளது.