தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1959ம் ஆண்டு வெளிவந்த படம் வீரபாண்டிய கட்டபொம்மன். நாட்டுப் பாடல்களில் மட்டும் உலவி வந்த கட்டபொம்மனின் வரலாற்றை புத்தகமாக எழுதினார் மா.பொ.சிவஞானம். அதையே திரைக்கதை வடிவமாக்கி திரைக்காவியமா தந்தார் அந்தக்கால பிரமாண்ட இயக்குனர் பி.ஆர்.பந்துலு. கற்பனையில் கண்டு வந்த கட்டபொம்மனை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் நடிகர் திலகம் சிவாஜி. அவருடன் ஜெமினி கணேசன், பத்மினி, எஸ்.வரலட்சுமி, ராகினி நடித்திருந்தார்கள். ஜி.ராமநாதனின் இசையும், சுப்பாராவ், கர்ணன் ஆகியோரின் ஒளிப்பதிவும் கட்டபொம்மனை மீண்டும் கொண்டு வந்தன.
இந்த தலைமுறையினருக்காக வீரபாண்டிய கட்டபொம்மனை ராஜ் டி.வியும், சாய் கணேஷ் பிலிம்சும் இணைந்து புத்துயிரூட்டி மீண்டும் கொண்டு வருகிறார்கள். படத்தை டிஜிட்டல் மயமாக்கி, அகன்ற திரைக்கு மாற்றி, 5.1 சவுண்ட் சிஸ்டம் பொருத்தி இப்படி பல மாற்றங்களை செய்திருக்கிறார்கள். வருகிற 31ந் தேதி வீரபாண்டிய கட்டபொம்மனை தமிழக திரையரங்குகளில் மீண்டும் வீர நடை போட விடுகிறார்கள்.