ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் சூர்யாவை வைத்து மாற்றான் படத்தையும், தனுஷை வைத்து அனேகன் படத்தையும் இயக்கினார் கே.வி.ஆனந்த். இவ்விரு படங்களுமே பெரியளவில் வெற்றி பெறவில்லை. குறிப்பாக சூர்யா நடித்த மாற்றான் படத்தைத் தயாரித்தவகையில் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் என்று சொல்லப்பட்டது. இரண்டு தோல்விப்படங்களைக் கொடுத்தாலும் கே.வி.ஆனந்துக்கு மூன்றாவதாக ஒரு படத்தை இயக்கவும் அட்வான்ஸ் கொடுத்திருந்தனர்.
இந்தமுறையாவது வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அஜித்துக்கு ஒரு கதை பண்ணினார் கே.வி.ஆனந்த். கதையைக் கேட்ட அஜித்துக்கு பிடித்துப்போக, நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அஜித்தின் சம்பளம் படத்தின் பட்ஜெட், படத்தின் பிசினஸ் போன்ற விஷயங்களைப் பற்றி கல்பாத்தி அகோரத்திடம் ஆலோசனை நடத்தியபோது... இவ்வளவு பெரிய தொகைக்கு படம் எடுத்தால் பிசினஸ் பண்ணுவது கஷ்டம் என்று அபிப்ராயப்பட்ட கல்பாத்தி அகோரம், வேறு ஹீரோவுக்கு கதை பண்ணும்படி சொல்லிவிட்டாராம். எனவே அஜித்துக்காக பண்ணிய கதையை பெண்டிங் வைத்துவிட்டு வேறு ஹீரோவுக்காக கதை பண்ணும் வேலையில் இறங்கிவிட்டார் கே.வி.ஆனந்த்.