ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோலிவுட்டில் தமிழ் நடிகைகளைக் காட்டிலும் பிற மாநில நடிகைகளே ஏராளம். சமீப காலமாக தெலுங்கு நடிகைகளின் வருகை கோலிவுட்டில் அதிகரித்துள்ளது. டோலிவுடிளிருந்து கோலிவுட்டிற்கு வந்த பிந்து மாதவி, ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகளின் வரிசையில் தற்போது நடிகை ரேஷ்மா ராத்தோரும் இடம் பிடித்துள்ளார். டோலிவுட்டில் இயக்குநர் மாருதி இயக்கிய இ ரோஜுலு படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த ரேஷ்மா ராத்தோர், தமிழில் உருவாகவிருக்கும் அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகின்றார். இயக்குநர் இன்ப சேகர் இயக்கும் இப்படத்தில் ரேஷ்மா ராத்தோர் கராத்தே கற்ற தைரியமான கல்லூரி மாணவியாக நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிப்பதற்காக ரேஷ்மா ராத்தோர் கராத்தே பயிற்சி எடுத்துக் கொண்டாராம். இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்க மீதம் உள்ளதாம்.. இப்படத்தை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.