பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காவல் படத்தை அடுத்து மாப்ள சிங்கம், அஞ்சலா, மன்னர் வகையறா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விமல். இதில், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் மதன் தயாரிப்பில் உருவாகியுள்ள மாப்ள சிங்கம் படத்தை ராஜசேகர் இயக்குகிறார். விமலுடன் இணைந்து அஞ்சலி, சூரி, ராதாரவி, காளிவெங்கட், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தெலுங்கு படங்களில் கமிட்டான அஞ்சலி, கடைசியில் ஒரு பாடலை முடித்துக்கொடுக்காமல் இழுத்தடித்ததாக செய்திகள் வெளியாகின. அதோடு, அந்த பாடலை படமாக்க வேண்டுமென்றால் ஆந்திராவுக்கு வாருங்கள் என்று அவர் கூறி வந்ததாகவும் சொன்னார்கள்.
அதையடுத்து இப்போது விமல், அஞ்சலி இடம்பெற்ற அந்த டூயட் பாடலை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத் சென்று அங்குள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படமாக்கிவிட்டு நேற்று முன்தினம்தான் சென்னை திரும்பியுள்ளனர். தான் ஏற்கனவே கொடுத்த கால்சீட்டை வீணடித்து விட்டு மீண்டும் கால்சீட் கேட்டதாலே அஞ்சலி இப்படி தான் இருக்குமிடத்துக்கு மாப்ள சிங்கம் யூனிட்டை வரவைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆக, மாப்ள சிங்கம் படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பும் முடிந்து விட்டதால் அடுத்து படத்தை வெளியிடும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.