விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
அஜீத்தின் தீவிரமான ரசிகர் சிம்பு. அதன்காரணமாக தான் வெளியூர்களில் படப்பிடிப்பில் இருந்தாலும் அஜீத் படம் ரிலீசாகிறது என்றால் அவுட்டோரில் இருந்தே சென்னை வந்து முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விடுவதை இப்போதுவரை கடைபிடித்து வருகிறார் சிம்பு.
அதுமட்டுமின்றி, படப்பிடிப்பு தளங்களுக்கு வந்துவிட்டால் செம பில்டப் கொடுப்பார் சிம்பு. ஆனால் அதுவே அவருக்கும், டைரக்டர்களுக்கிடையிலான நட்பில் விரிசல் விழ வைத்தது. அதனால்தான் பின்னர் வெட்டி பந்தாக்களை ஏறக்கட்டி விட்டு அஜீத்தைப்போன்று தன்னை நல்லவராக மாற்றிக்கொண்டார் சிம்பு.
இந்த நிலையில், தற்போது தான் நடித்துள்ள வாலு படத்தில் அஜீத்தைப்பற்றி ஒரு பாடல் வைத்து, அந்த பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் சிம்பு. அதில் அஜீத்தையே தனது தலைவர் என்றும், தான் என்றென்றும் அவரது ரசிகன் என்பது போலவும் பாடல் எழுதி பாடி நடித்திருக்கிறாராம் சிம்பு. ஆக, அஜீத்தின் ரசிகர்களை வாலு படம் ஓடும் தியேட்டர்களுக்கு இழுக்க ஒரு சூப்பர் பிளான் போட்டிருக்கிறார் சிம்பு.