Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

த்ரிஷாவுக்கு குடை பிடித்த அஜீத்!

16 ஜூலை, 2015 - 10:53 IST
எழுத்தின் அளவு:
Ajith-pick-umberalla-for-Trisha

என்ன த்ரிஷாவுக்கு அஜீத் குடை பிடித்தாரா? ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா. ஆனால் அதுதான் உண்மை. இது இப்போது நடந்தது அல்ல, சில வருடங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. அதாகப்பட்டது, கீரிடம் படத்தில் இடம்பெற்ற அக்கம் பக்கம் -என்ற பாடல் கேரளாவில் உள்ள ஒரு ஏரியில் படமாக்கப்பட்டதாம்.


அப்போது, ஏரிக்குள் அஜீத்-த்ரிஷா இருவரும் ஒரு போட்டில் அமர்ந்தபடி அந்த பாடலில் நடித்துள்ளனர். ஏரிக்கு வெளியே நின்று கேமரா யூனிட் அந்த காட்சியை படமாக்கியுள்ளனர். ஆனால், அப்போது ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் ஏரிக்கு வெளியே நிற்கும் தனது உதவியாளரை ஏரிக்குள் வரவைத்து டச்சப் செய்து கொண்டதோடு, அடுத்த ஷாட்டுக்கு கேமரா யூனிட் ரெடியாகிறது வரை உதவியாளரை தனக்கு குடை பிடிக்க சொன்னாராம் த்ரிஷா. இதனால் அவர் ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் ஏரிக்குள் செல்வதும், பின்னர் வெளியேறுவதுமாக இருந்திருக்கிறார். இதனால் அவர் சென்று வரும் ஒவ்வொரு நேரத்திற்காகவும் யூனிட்டே காத்திருந்து பின்னர் படமாக்கியிருக்கிறார்கள்.


இதைப்பார்த்துக்கொண்டிருந்த அஜீத், ஒருமுறை ஏரிக்கு வெளியே நின்ற உதவியாளரை த்ரிஷா அழைத்தபோது அவரிடமிருந்த குடை மற்றும் டச்சப் பொருட்களை வாங்கிக்கொண்டு அவரை அனுப்பிவிட்டு, தானே த்ரிஷாவுக்கு குடை பிடித்திருக்கிறார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த த்ரிஷா, நீங்கள் எதற்காக குடை பிடிக்கிறீர்கள் என்று கேட்க, ஒவ்வொரு முறையும் உனது உதவியாளர் ஏரிக்குள் வந்து வந்து செல்ல வெகுநேரமாகிறது அதுவரை மொத்த யூனிட்டும் வெளியில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அத்தனை பேரை காத்திருக்க வைக்க வேண்டாம் என்பதற்காத்தான் நானே குடை பிடிக்கிறேன். எனக்கு இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை என்றாராம்.


ஆனால், அஜீத் அப்படி தனக்கு குடை பிடித்ததை மற்றவர்கள் சுற்றி நின்று கோபத்துடன் பார்த்ததைக்கண்ட த்ரிஷா, எனக்கு நீங்கள் குடை பிடிக்க வேண்டாம் என்று சொல்லி அந்த குடையை ஏரிக்குள் தூக்கிப்போட்டு விட்டாராம். அதன்பிறகுதான் அஜீத்தையே குடை பிடிக்க வைத்து விட்டாரே என்று கோபத்துடன் த்ரிஷாவைப்பார்த்த அத்தனை முகங்களின் கோபமும் அடங்கியதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in