தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அறிமுகமான கொஞ்சகாலத்திலேயே பரவலான வரவேற்பைப் பெற்ற நடிகை அமலாபால், மைனா மூலம் பிரபலமானவர் இவர். ஆனால் அதற்கு முன்பே வீரசேகரன், சிந்து சமவெளி படங்களில் நடித்திருந்தாலும் மைனா வையே தன் முதல்படம் போலப் பேசிவந்தார்.
அதற்குப் பிறகு வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், 'வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மார்க்கெட் போய் விடவில்லை. அதற்குள் தலைவா படத்தில் நடித்த போது தன் காதல் தலைவாவாக அப்படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணமும் செய்து கொண்டார்.
அப்போதே மீண்டும் நடிப்பாரா என்ற கேட்கப்பட்டது. அப்போது இப்போதைக்கு குடும்பம் மட்டுமே என்று சொல்லி மழுப்பினார்கள் இருவரும். திருமணத்துக்குப்பின் குழந்தைகள் படமான ஹைக்கூ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து சிறிது நேரம் வருகிறார். ஆனால் மீண்டும் அமலாபால் சீரியசாக நடிக்க இயக்குநர் ஏ.எல்.விஜய் பச்சைக் கொடி காட்டியுள்ளதாகத் தெரிகிறது. வெளி நிகழ்ச்சிகளுக்கு தலைகாட்டாத அமலாபால் நேற்று சைமா விருதுகள் அறிமுக விழாவில் முழு ஒப்பனையுடன் வந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து இருந்தார். துபாயில் ஆகஸ்ட் 6ல் நடக்கும் இவ்விழாவில், அமலாபாலும் கலந்து கொண்டு நடனம், நடிப்பு என பங்களிக்கிறாராம். அடுத்து நல்லதொரு வாய்ப்பில் அமலாபால் நடிக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
36 வயதினிலே படத்தில் ஜோதிகா நடித்தது போல அமலாபாலும் மறு பிரவேசம் செய்ய இருக்கிறாராம். நல்ல கதையை கேட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.