தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கிரேஸி மோகன் எழுதி நடிக்கும் சாக்லேட் கிருஷ்ணா என்ற நகைச்சுவை நாடகம் 2008ம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது. அது தனது 777வது மேடையேற்றத்தை சமீபத்தில் கண்டது. இதனை விழாவாக கொண்டாடினார் கிரேஸி மோகன். இதில் கமலஹாசன், நல்லி குப்புசாமி, சித்ராலயா கோபு, உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கமலஹாசன் பேசியதாவது...
இந்த நகைச்சுவை நாடகத்தை பார்த்தபோது கண்ணீர் ததும்ப சிரித்து மகிழ்ந்தேன். இதன் 500வது மேடையேற்றத்திற்கே வர நினைத்தேன் முடியவில்லை. இப்போது 777து மேடைக்கு வந்திருக்கிறேன். இது இன்னும் ஆயிரம் மேடையை காணும். நானும் டிகேஎஸ் நாடக குழுவில் இருந்திருக்கிறேன் ஒரு நாடகம் ஆயிரம் மேடை காண 20 ஆண்டுகள் ஆகும். ஆனால் மிக குறுகிய காலத்தில் சாக்லேட் கிருஷ்ணா 777 கண்டிருக்கிறது. இது பெரிய சாதனை. நாடகத்துக்கான தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்திருக்கிறது என்றாலும் மக்களை நாடத்துக்கு இழுத்து வருவது சாதனைதான்.
நகைச்சுவை நாடகம் போன்று கிரேஸி மோகனுக்கு சீரியஸ் நாடகமும் எழுத வரும். அவர் ஏன் எழுத மறுக்கிறார் என்று தெரியவில்லை. எழுத வேண்டும். நாடகம் தவிர கவிதை, ஓவியம் போன்ற பல கலைகளின் வித்தகர் கிரேஸி மோகன். இவ்வாறு கமல் பேசினார். விழாவில் நாடக கலைஞர்களுக்கு கமல் கேடயம் பரிசு வழங்கி கவுரவித்தார்.