ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரள போலீஸ் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி மெரின் ஜோசப். இதனால் இவருக்கு பொதுமக்கள் பலரும் ரசிகர்கள்.. அதுமட்டுமல்ல பேஸ்புக் பக்கத்தில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையும் ஏராளம். ஆனால் சமீபத்தில் இவர் பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு புகைப்படம் விமர்சனத்துக்கு ஆளானதுடன் மேலதிகாரிகளிடம் இருந்து அவருக்கு திட்டுகளையும் வாங்கி தந்துள்ளது.
சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா எர்ணாகுளத்தில் உள்ள புனித தெரசா கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு உள்ளூர் எம்.எல்.ஏவுடன், ஐபி.எஸ் அதிகாரியான மெரின் ஜோசப்பும் விருந்தினர்களாக வந்திருந்தனர்.. மெரின் ஜோசப் டூட்டியில் இருந்ததால் யூனிபார்முடன் வந்திருந்தார்.
இதுதவிர மலையாள முன்னணி நடிகரான நிவின்பாலியும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிவின்பாலியை பார்த்ததும் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கவும் அவருடன் போட்டோ எடுக்கவும் வந்திருந்த சிலர் முண்டியடித்தனர். அதில் நிவின் பாலியுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு மெர்வின் ஜோசப்புக்கு கிடைத்தது.
மெர்வின் ஜோசப் தன கையில் இருந்த செல்போனை அருகில் நின்றிருந்த எம்.எல்.ஏவிடம் தந்து நிவின்பாலியுடன் சேர்ந்து நின்றுகொண்டு அதை போட்டோ எடுத்து தரச்சொன்னார். எம்.எல்.ஏவும் மறுப்பு சொல்லாமல் எடுத்துகொடுத்தார். சிக்கல் எல்லாம் அதில் இல்லை. மெர்வின் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டதும், இது அவரது உயரதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. அவர் நிவின்பாலியுடன் எடுத்த போட்டோவில் யூனிபார்முடன் இருந்ததால் அதற்காக அதிகாரிகளிடம் இருந்து திட்டு கிடைத்ததாக சொல்லப்படுகிறது.. ஆனால் அவர் மீது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.