பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
விஜய்யுடன் இணைந்து நடித்த நண்பன் படத்திற்கு பிறகு ஜீவா பெரிதும் எதிர்பார்த்து நடித்த முகமூடி, டேவிட், யான் ஆகிய படங்கள் தோல்வியடைந்து அவருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தன. இந்த நிலையில் தற்போது திருநாள், கவலை வேண்டாம் ஆகிய படங்களில் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் திருநாள் படத்தில் ஈ படத்திற்கு பிறகு நயன்தாராவுடன் இணைந்திருக்கிறார். மார்க்கெட் இல்லாத நடிகைகளுடன் நடிப்பதை விட மார்க்கெட்டில் இருக்கும் ஒரு நடிகையை படத்தில் சேர்த்துக்கொண்டால் வியாபாரத்துக்கு பக்கபலமாக இருப்பார் என்பதால் நயன்தாராவை விடாமல் பிடித்து இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளனர். மேலும், ரெளத்திரம் படத்தில் முன்கோபக்காரராக நடித்த ஜீவா, இந்த படத்தில் ரவுடியாக நடிக்கிறார். அதனால் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு, மூன்று மாதங்களாக ஜிம்முக்கு சென்று தனது உடல்கட்டை வலுவாக்கி களத்தில் இறங்கிய ஜீவா, இப்போது சண்டை காட்சிகளில் எதிரிகளை பிரிச்சி மேய்ந்துகொண்டிருக்கிறாராம். ஆக்ரோசத்துடன் அவர் வரிந்து கட்டிக்கொண்டு நடித்துள்ள காட்சிகள் படு ஆவேசமாக படமாக்கப்பட்டுள்ளதாம்.