ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மறைந்த மெல்லிசை மன்னர் எம்எஸ்விக்கு 'பத்ம' விருதுகள் உட்பட மத்திய அரசின் முக்கிய விருதுகள் வழங்கப்படாதது குறித்து நடிகை ஸ்ரீப்ரியா ஆவேசமான கருத்துக்களைக் கூறியுள்ளார். இசையமைப்பாளர் எம்எஸ்விக்கு இதுவரை எந்த ஒரு 'பத்ம' விருதுகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த யாருமே அதற்குண்டான முயற்சிகளை எடுக்காதது ஆச்சரியமே.
நேற்று ஸ்ரீப்ரியா அவருடைய டிவிட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளதாவது, “என்னுடைய அபிமான இசைமைப்பாளர் எம்எஸ்வி இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவருடைய பல பாடல்களுக்கு நான் வாயசைத்துள்ளேன். என்னுடைய பல படங்களுக்கு அவர் தயாரிப்பாளராக இருந்துள்ளார். உங்களுக்கு என்னுடைய அஞ்சலி ஐயா. என்னிடம் சில கேள்விகள் உள்ளன.
எத்தனையோ தென்னிந்திய இசையமைப்பாளர்களுக்கு என்றாவது ஒரு நாள் எம்எஸ்வி போல ஆக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும். ஆனால் ஏன் ஒருவர் கூட அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்ட போது, எங்களுக்காக ஒரு பாதை அமைத்துக் கொடுத்த எம்எஸ்விக்கு வழங்காத வரை நாங்கள் அதை ஏற்க மாட்டோம் என்று சொல்லவில்லை.
அவர்கள் மேஸ்ட்ரோவாக இருக்கலாம், ஜீனியஸ் ஆக இருக்கலாம், அவர்கள் மிகப் பெரும் தகுதியுடையவர்களாக இருக்கலாம். ஆனால், ஏன் அவர்கள் உங்களுக்கு ஆதரவளிக்கவில்லை?
வந்தவர் போவது இயற்கை, அதற்காக என் கண்கள் கலங்கவில்லை. இந்த தேசம் உம்மை கௌரவிக்கவில்லையே என்று என் மனம் ஒப்பாரி வைத்து புலம்புகிறது,” என ஆதங்கப்பட்டு தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.