தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவில் ஒரு நடிகனாக கால்வைத்து பதினான்கு வருடங்களை கடந்துவிட்டார் நடிகர் பிருத்விராஜ்.. இதில் நிறைய ஏற்ற இறக்கங்கள.. இமாலய ஹிட்டுகள், பாதாளத்தில் தள்ள முயற்சித்த தோல்விகள் என பல அனுபவங்கள் பிருத்விராஜுக்கு கிடைத்துள்ளன. சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த பதினான்கு வருடங்களில் சினிமா தன்னை ஒரு நடிகனாகவும் மனிதனாகவும் நிறைய மாற்றியிருக்கிறது என கூறியுள்ளார். குறிப்பாக தான் இந்த அளவுக்கு சிறப்பாக நடிக்க காரணம் நடிகை ரேவதி தான் என கூறியுள்ளார்.
மலையாளத்தில் பிருத்விராஜ் அறிமுகமான காலகட்டத்தில் 'நந்தனம்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப்படத்தில் பிருத்விராஜின் அம்மாவாக நடித்தவர் ரேவதி.(இந்தப்படம் தான் தமிழில் தனுஷ் நடிக்க சீடன்' என்ற பெயரில் ரீமேக்கானது). 'நந்தனம்' படத்தில் நடித்த பிருத்விராஜ், நடிக்க வந்த புதிது என்பதால் நடிப்பை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.