ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில், ஜிகர்தண்டா, காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் படங்களில் கமிட்டானபோது இந்த படங்களே கோலிவுட்டில் தனக்கு ஒரு பெரிய இடத்தை பிடித்துத்தரும் என்று நம்பினார் சித்தார்த். ஆனால் இந்த படங்கள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. மூன்று படங்களில் பெரிதாக ஓடிய ஜிகர்தண்டாகூட பாபி சிம்ஹாவுக்கு சாதகமாகி விட்டது. அதனால் இப்போது சுந்தர்.சியின் அரண்மனை-2 படத்தில் மட்டுமே நடிக்கும் சித்தார்த், தமிழை நம்பி தெலுங்கு சினிமாவை விட்டு விடக்கூடாது என்று அங்குள்ள டைரக்டர்களை சந்தித்து படவேட்டையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தெலுங்கு படம் சித்தார்த்துக்கு கமிட்டாகியிருக்கிறது. ஆனால், இந்த படம் அவருக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் சமந்தா என்று கூறப்படுகிறது. பல வருடங்களாக இவர்கள் காதலித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் அந்த காதல் முறிந்து விட்டதாககூட மீடியாக்கள் பரபரப்பு செய்தி வாசித்தன. இந்த சூழ்நிலையில், தற்போது சமந்தாவே நட்பு அடிப்படையில் சித்தார்த்துக்கு சிபாரிசு செய்திருப்பதாகவும் இன்னொரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.