ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எப்பவும் வித்தியாசமான வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து, அதில் முத்திரையும் பதித்து ரசிகர்களை கவருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது அவர் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள படம் ஆரஞ்சுமிட்டாய். நடித்ததோடு இல்லாமல் இந்தப்படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார்.
விஜய் சேதுபதியுடன் ரமேஷ் திலக், அஷ்ரிதா நடிக்கிறார்கள். பிஜு விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். ஜஸ்டின் பிரகாகரன் இசை அமைக்கிறார். படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. படத்தின் கதை தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத புதுமையான கதை. புதுமைகளை தேடிச் செல்லும் விஜய் சேதுபதி இதில் 55 வயது முதியவராக நடிக்கிறார். படத்தில் ஒரு ஆம்புலன்ஸ் முக்கியமான ரோல் வகிக்கிறது. படத்தின் பெரும்பகுதி அந்த ஆம்புலன்சிலேயே நடக்கிறது. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
இப்படம் பற்றி விஜய் சேதுபதி நம்மிடம் பேசும்போது, பிஜூ விஸ்வநாத் இப்படத்தின் கதையை சொன்னபோது நான் தயாரிக்கிறேன் மட்டும் தான் சொன்னேன். ஆனால் உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட எல்லோரும் சேர்ந்து என்னை இந்தப்படத்தில் நடிக்க வைத்துவிட்டார்கள். அப்பாவுக்கும், மகனுக்கும் இடையேயான ஒரு அழகான கதை தான் இந்த ஆரஞ்சுமிட்டாய். எனது முதல்பட தயாரிப்பையே ஒரு சுவிட்டோடு ஆரம்பித்துள்ளேன் என்றவரிடம், இப்படத்தில் உங்களுக்கு ஹீரோயின் இல்லையே என்று கேட்டபோது... என்னை பொறுத்தவரை ஒரு படத்திற்கு கதை தான் முக்கியம், ஹீரோயின் முக்கியமல்ல என்று கூறினார்.
ஆரஞ்சுமிட்டாய் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் இம்மாதம் ஜூலை 31ம் தேதி நடைபெற இருக்கிறது.