தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் டோலிவுட்டில் உருவான சரித்திர திரைப்படமான பாகுபலி நேற்று தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. பிரபாஸ், ராணா அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். கன்னட நடிகர் சுதீப் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ராஜமௌலி இயக்கிய நான் ஈ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து புகழ் பெற்ற சுதீப் மீண்டும் அவரது இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் நடித்து குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து சுதீப் கூறுகையில் பாகுபலி படத்தில் அஸ்லாம் கான் எனும் வேடத்தில் தான் நடித்திருப்பதாகவும் அஸ்லாம் கான் போருக்கு தேவையான சிறந்த ஆயுதங்களை வழங்குவதாகவும் அத்தகைய ஆயுதங்களை தயாரிக்க படக்குழுவினர் அதிக ஆராய்ச்சிகள் செய்தாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர் ராஜமௌலியுடன் நான் ஈ படத்திற்கு பின்னர் மீண்டும் பாகுபலி படத்தில் இணைந்தது மகிழ்ச்சி மட்டுமல்லாது பெருமிதத்தையும் தருவதாக சுதீப் கூறியுள்ளர்.