தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்திய திரை உலகின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்புடன், இயக்குநர் ராஜமெளலியின் மூன்றாண்டு கால உழைப்பில் உருவான பாகுபலி படம் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. தெலுங்கு மற்றும் தமிழில் நேரடி படமாக வெளிவந்துள்ள பாகுபலி ஹிந்தி மற்றும் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வந்தது. ஆனால் கேரளாவில் திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் 50 திரையரங்குகளில் மட்டுமே பாகுபலி படம் திரைக்கு வந்தது. இது கேரள விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. ஆனால் தற்போது பாகுபலி படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதை அறிந்து கேரளாவில் பாகுபலி படம் திரையிடப்பட்டுள்ள 50 திரையரங்குகளிலும் இப்படத்திற்கான காட்சி நேரங்களும் அதிகரிக்கப்படுள்ளதாக கூறப்படுகின்றது. பாகுபலி படக்குழுவினர் கேரளாவிலும் இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். கேரளாவில் தற்போது நடைபெற்று வரும் திரையரங்கு உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் பாகுபலி படத்தின் வசூலை பாதிக்கும் வண்ணம் அமைந்துள்ளதாக விநியோகஸ்தர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.