தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காதல் வைரஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான௦வர் நடிகர் ரிச்சர்டு. அஜித்தின் மச்சானான இவர் அதன்பின்னர் பல படங்களில் நடித்துவிட்டார். ஆனால் அவருக்கான ஹீரோ அந்தஸ்த்து இன்னும் கிடைக்கவில்லை. தொடர்ந்து வெற்றி பெற சினிமாவில் போராடி வருகிறார். தற்போது அவரது நடிப்பில் காட்டுராணி கோட்டை என்ற த்ரில்லர் படம் வௌியாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சிறப்பு காட்சி நடந்தது. அப்போது நம்மிடம் ரிச்சர்டு பேசியதாவது...
ஒவ்வொரு படமும் நன்றாக வரும், இந்தப்படம் நமக்கு கை கொடுக்கும் என்று எண்ணித்தான் நடிக்கிறேன். சினிமாவில் வெற்றி பெறும் வரை நான் போராடுவேன். என்றவரிடம் சமீபத்தில் அஜித், நடிகர் அப்புக்குட்டியை வைத்து விதவிதமாக போட்டோ எடுத்தாரே அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்...? என்று கேட்டபோது, 10 வருடத்திற்கு முன்பே அஜித் பெரிய போட்டோகிராபர் தான். எங்களை வைத்து விதிவிதமாக படங்கள் எடுத்துள்ளார். பிறருக்கு உதவுவது அஜித்துக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். சரி சினிமாவில் உங்களுக்கு ஏதாவது உதவி செய்திருக்கிறாரா.? என்று கேட்டால் சரியான நேரம் வரும் போது அவர் கண்டிப்பாக செய்வார் என்று கூறினார்.