தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளாவிலும் 'பாகுபலி' திரைப்படம் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் என முன்னர் அறிவித்திருந்தார்கள். ஆனால், அந்தப் படத்தை டப்பிங் செய்து வெளியிடுவதன் மூலம் நேரடி மலையாளப் படங்களுக்கு ஆபத்து வரலாம் என எண்ணிய பல திரையரங்கு உரிமையாளர்கள் 'பிரேமம்' பட திருட்டு டிவிடி விஷயத்தைக் காரணமாக வைத்து ஸ்டிரைக் அறிவித்து விட்டார்கள். இதனால், சுமார் 200 திரையரங்குகளுக்கு மேல் வரவேண்டிய 'பாகுபலி' திரைப்படம் வெறும் 50 திரையரங்குகளில் மட்டும்தான் வெளியாகியுள்ளது.
'பிரேமம்' பட திருட்டு டிவிடி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை 'பாகுபலி' படம் மற்ற திரையரங்குகளில் திரையிடப்பட வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கிறார்கள். இன்று வெளியாகியுள்ள 50 திரையரங்குகளும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள்தான். இந்தப் படத்திற்காக கேரளாவிற்கு சென்று ஸ்பெஷல் பிரமோஷன் நிகழ்ச்சிகளை வேறு படக்குழுவினர் செய்தார்கள். மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் தவிர பி அண்ட் சி திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு சிண்டிகேட்டாக செயல்பட்டே 'பாகுபலி' படத்தை முடக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.