ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சந்தானம் நாயகனாக நடித்த முதல் படமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்காக புனேயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் ஆஷ்னா சாவேரி. அப்படி அவர் சந்தானத்துடன் நடித்த முதல் படம் ஹிட்டானது. அதையடுத்து சந்தானத்தின் இரண்டாவது படமான இனிமே இப்படித்தான் படத்திலும் நாயகியாக நடித்தார் ஆஷ்னா. அந்த படமும் ஹிட்டடித்தது. ஆக, சந்தானத்தைப் பொறுத்தவரை ராசியான ஜோடியாகி விட்டார் ஆஷ்னா. இந்நிலையில், முதல் படத்தில் நடித்த பிறகு அவர்களைப்பற்றிய கிசுகிசு செய்திகள் கொளுந்துவிட்டு எரிந்தன. இருப்பினும், இரண்டாவது படத்திலும் ஆஷ்னாவையே நடிக்க வைத்தார் சந்தானம். அதோடு, கிசுகிசுக்கள் உறுதியாகி விடக்கூடாது என்பதற்காக, மொத்த படத்தில் நடிக்கவும் ஒரே நேரத்தில் கால்சீட் கேட்டால் முன்னணி நடிகைகள் தரமாட்டார்கள். ஆனால் ஆஷ்னா ஒரே கால்சீட் கொடுத்ததால் நடிக்க வைத்தேன் என்று சந்தானமே முன்னெச்சரிக்கையாக சொல்லி இந்த முறை கிசுகிசுவில் இருந்து தப்பித்துக்கொண்டார். இந்த நிலையில், மீண்டும் ஹீரோவாக நடிப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கும் சந்தானத்தின் புதிய படத்திலும் நாயகியாகி விட வேண்டும் என்று கல்லெறிந்து வருகிறாராம் ஆஷ்னா சவேரி. ஆனால் மூன்றாவது படத்திலும் அவரையே நடிக்க வைத்தால் ஏற்கனவே கிசுகிசு பரப்பியவர்கள் இன்னும் எண்ணெய் ஊற்றி எறிய வைப்பார்கள் என்று ஆஷ்னாவை கண்டுகொள்ளாமல் இருக்கிறாராம் சந்தானம்.