தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'பாபநாசம்' படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் படம் 'தூங்காவனம்'. இந்தப் படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார் என்றே தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்போது படத்தில் கமல்ஹாசன் மனைவியாக 'பாபநாசம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆஷா சரத் நடிக்கிறார் என்கிறார்கள்.
நேற்று நடைபெற்ற 'பாபநாசம்' நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கூட 'இந்தப் படத்தில் நடித்துள்ள பல திறமைசாலிகளை தொடர்ந்து என் படத்தில் பயன்படுத்த உள்ளேன்,' என்று கமல்ஹாசன் தெரிவித்தார். அதோடு, 'தூங்காவனம்' படத்திலேயே அதை ஆரம்பித்துவிட்டார். கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிப்பது பற்றி ஏற்கெனவே ஆஷா சரத் சொல்லியிருந்தார்.
இப்போது அவர் கமல்ஹாசனின் மனைவியாக நடிப்பதுதான் புதிய தகவல். ஆஷா சரத் மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக 'வர்ஷம்' படத்திலும் மோகன்லால் ஜோடியாக 'கர்மயோதா' படத்திலும் நடித்திருக்கிறார். தன்னுடன் நடிப்பவர்கள் சிறப்பாக நடித்தால் அவர்களுக்குத் தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் வாய்ப்பை கமல்ஹாசன் கொடுப்பது வழக்கம். ஆன்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் 'விஸ்வரூபம்' படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தார்கள். அடுத்து 'உத்தம வில்லன்' படத்திலும் அவருடன் நடித்தார்கள். அந்த அதிர்ஷ்டம் தற்போது ஆஷா சரத்துக்கும் கிடைத்திருக்கிறது.