'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வழக்கமாக தெளுங்குபடங்கள் கேரளாவில் ரிலீஸ் ஆகும்போது மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு தான் ரிலீஸாவது வழக்கம். ஆனால் நாளை ரிலீஸாகும் 'பாகுபலி' படம் தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக உருவாகியுள்ளதால் பெரும்பாலான தியேட்டர்களில் இந்தமுறை தமிழிலேயே திரையிடுகிறார்கள். மலையாள ரசிகர்களுக்கும் மலையாள டப்பிங்கில் பார்ப்பதைவிட தமிழில் பார்ப்பதில் தான் விருப்பம் அதிகம் என்கிறார் இந்தப்படத்தை கேரளாவில் திரையிடும் குளோபல் யுனைடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான பிரேம் குமார்.
அதுமட்டுமல்ல கேரளாவில் முதன்முறையாக 4K புரஜக்சன் முறையில் திரையிடப்படும் படமும் 'பாகுபலி' தான். இதற்கு முன்னர் கடந்த மே மாதம் வெளியான 'பிரேமம்' படம் 5K முறையில் எடுக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த வடிவில் திரையிடுவதற்கான தியேட்டர்கள் இல்லையென்பதால் 2Kவுக்கு மாற்றப்பட்டு திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல திருவனந்தபுரத்தில் உள்ள ஏரிபிலக்ஸ் தியேட்டர்களில் மட்டும் 64 சேனல் டால்பி அட்மாஸ் சவுன்ட் சிஸ்டத்தில் 'பாகுபலி' ரிலீசாவதும் இன்னொரு சிறப்பு.. ஆக மலையாள ரசிகர்களுக்கு 'பாகுபலி' புதிய அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.