தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வாகை சூடவா இனியாவின் கைவசம் பல படங்கள் உள்ளன என்றாலும், அதில் ஓரிரு படங்களில் மட்டுமே அவர் கதாநாயகியாக நடிக்கிறார். மற்ற படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது தனது மார்க்கெட் ஆட்டம் கண்டிருப்பதால்தான் இப்படி சிறிய வேடங்களிலும் நடிக்கிறாராம் இனியா.
மேலும், தனது மார்க்கெட்டை உயர்த்திப் பிடிக்க சில நடிகைகளைப்போன்று கவர்ச்சியாக நடிக்க இனியாவுக்கு விருப்பம் இல்லையாம். அதனால் மிரட்டலாக திறமை காட்டக்கூடிய வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், மாசாணிக்குப்பிறகு பேய் கதைகளில் நடிக்க சில டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு வருகிறார் இனியா.
அதனால், கேரளாவில் இருந்து கொண்டே டைரக்டர்களுக்கு போன் போட்டு சான்ஸ் கேட்கும் அவர், போனிலேயே கதையை கேட்கிறார். அப்படி தனக்கு கதை பிடித்து விட்டால், 15 லட்சம் சம்பளம் கேட்கும் இனியா, பேச்சுவார்த்தைக்குப்பிறகு 7 லட்சத்தில் நடிக்கவும் சம்மதம் சொல்கிறார். அப்படி பேரம் படிந்த ஒரு படத்தில் அதிரடியான பேயாக நடிக்க தற்போது தயாராகிக்கொண்டிருக்கிறார் இனியா.