பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து மூவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்து பல சாதனைகளை படைத்தவர்கள். மூவரின் கூட்டணியில் தமிழ் சினிமாவுக்கு அற்புதமான படைப்புகள் கிடைத்தது. ஆனால் திடீர் புகழ், பணம் இவர்களுக்குள் ஈகோவை வளர்த்தது. சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் பெரிதாகி பிரிவினையில் முடிந்தது. இளையராஜாவும், வைரமுத்துவும் இணைந்து பணியாற்றி 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
காலம் மாறிவிட்டது. அடுத்த தலைமுறை சினிமாவிற்கு வந்து விட்டார்கள். ஆனால் இளையராஜா வைரமுத்து மீது கொண்டுள்ள பகை மட்டும் மாறவில்லை. சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து பேசுவார் இளையராஜா. ஆனால் அடுத்த தலைமுறை நட்போடு இருக்க விரும்புகிறது. இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்துவின் பாடல்களுக்கு இளையராஜாவின் மகன் யுவன் இசை அமைக்கிறார்.