டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காக்கா முட்டை படத்தில் பேரன்களுக்கு தோசையில் பீட்சா சுட்டுக் கொடுக்கும் அந்த பாட்டியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. காக்கா முட்டை வாய்ப்பு அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. 50 வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
சாந்திமணியின் இயற்பெயர் சரோமி தைரியம். சொந்த ஊர் சேலம். நடுத்தர வர்க்க குடும்பத்து பெண். உடன் பிறந்தவர்கள் 6 பேர். அனைவருமே படித்து நல்ல வேலையில் இருக்கும்போது சரோமிக்கு மட்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை. சேலம் மார்டன் தியேட்டர்சுக்கு வாய்ப்பு கேட்டு சென்றபோது அங்கு நடிகை எஸ்.ஆர்.ஜானகி அறிமுகம் ஆனார். அவருடன் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார். பெயரை சாந்திமணி என்று மாற்றிக் கொண்டார்.
ஜானகி வீட்டில் வேலை பார்த்துக் கொண்டே நாடகங்களில் நடித்தார். நாடகத்தில் உடன் நடித்த குடந்தை மணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே சினிமா ஆசை நிறைவேறாததால் கும்பகோணத்துக்கு சென்றனர். அங்கு கூலி வேலை செய்து வாழ்ந்தனர். நான்கு குழந்தைக்கு தாயானார். சினிமா இயக்குனர் ஆக முடியாத கோபத்தை கணவர் இவர் மீது காட்ட தினமும் அடி உதை வாங்கினார். கணவர் கொடுமை தாங்காமல் மீண்டும் சென்னைக்கு வந்தார். மீண்டும் சினிமா வாய்ப்பு தேடினார். சின்ன சின்ன கேரக்டர்கள் கிடைத்தது. நடிகர் சங்க உறுப்பினர் ஆனார். ஓரளவிற்கு சம்பாதிக்க ஆரமபித்ததும் பிள்ளைகள் இவருடன் வந்து சேர்ந்து கொண்டார்கள்.