சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சினிமாவில் நடிகை, பாடகி என்று இரண்டு முகம் காட்டி வருபவர் நித்யாமேனன். சராசரியான உயரத்துக்கு குறைவாக இருந்தும்கூட நடிப்புத்திறமையில் உயர்ந்து நிற்பதால் நான்கு மொழி நடிகையாகியிருக்கிறார் நித்யா. முக்கியமாக, இந்தியாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தார். அதேபோல் காஞ்சனா-2விலும் கங்கா என்ற கேரக்டரில் கலக்கியிருந்தார்.
இந்தநிலையில், ராணி ருத்ரம்மா தேவி என்ற சரித்திர படத்திலும் ஒரு அதிரடி ஆக்சன் ரோலில் நடித்திருக்கிறார். இந்த வேடத்தில் அவருக்கு வாள் சண்டை காட்சிகளும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் இந்த படத்திற்கு பிறகு தெலுங்கில் தனது மார்க்கெட் எகிறிவிடும் என்று எதிர்பார்க்கிறாராம் நித்யாமேனன்.
ஆக, தற்போது தமிழிலும் அவரது மார்க்கெட் மணிரத்னம் படத்திற்கு பிறகு எகிறியிருக்கிறது என்றபோதும் இன்னமும் நித்யாவுக்கு புதிய படங்கள்தான் எதிர்பார்த்தபடி கமிட்டாகவில்லை. இதற்கு காரணம், ஹீரோவுக்கு இணையான வெயிட்டான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறும் அவர், தனது சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்தி கேட்கிறாராம். கதை கேட்பதற்கு முன்பே, இதுதான் எனது சம்பளம், இதற்கு நீங்கள் தயார் என்றால் கதை கேட்க நானும் தயார் என்கிறாராம் நித்யாமேனன். இப்படி அவரது பேச்சு அதிரடியாக இருப்பதினால்தான் இன்னமும் புதிய படங்கள் கமிட்டாகவில்லை என்று கூறப்படுகிறது.