‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சமீபகாலமாக டோட்டல் கோலிவுட்டையே பேய் பிடித்து ஆட்டுவித்து வருகிறது. மேலும், இதற்கு முன்பு ஹீரோக்களுக்கு பேய் கதையில் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தது. ஆனால், லாரன்ஸின் காஞ்சனா-2வுக்கு பிறகு சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு பேய் கதையில் நடிக்கும் ஆசை மேலோங்கியது.
இந்தநிலையில, அரண்மனை படத்தில் பேயாக நடித்த ஹன்சிகா அந்த படத்தின் 2ம் பாகத்திலும் முதல் பாகத்தைவிட அதிரடியான பேயாக நடிக்கப்போகிறாராம். முக்கியமாக சில படங்களில் ஆண் பேய்கள் மிரட்டியதை விடவும் இந்த படத்தில் ஹன்சிகாவை மிரட்டல் பேயாக காண்பிக்கிறாராம் சுந்தர்.சி
ஆக, இதுவரை கவர்ச்சிப்பேயாக நடித்து வந்த ஹன்சிகா இப்போது மிரட்டல் பேயாகியிருப்பதைத் தொடர்ந்து, மாயா படத்தில் நயன்தாராவும் பேயாக நடித்துள்ளார். செளகார் பேட்டையில் ராய் லட்சுமியும் பேயாக நடிக்கிறார். இப்படி பல நடிகைகளும் பேய் அவதாரம் எடுத்து வருவதைப்பார்த்து கோலிவுட்டின் த்ரிஷா, சமந்தா உள்ளிட்ட நடிகைகளுக்கும் கூட பேயாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை வேர் விட்டுள்ளதாம்.