ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஐ படத்திற்கு பிறகு அதிரடியாக 4 படங்களில் கமிட்டாகி விட்டார் எமி ஜாக்சன். இதில் தனுசுடன் நடித்துள்ள விஐபி-2 படத்திலும், விஜய்யின் 59வது படத்திலும் சமந்தாவுடன் இணைந்து நடிக்கிறார். ஆனால் விஐபி-2 படத்தில் சமந்தாவையே முதன்மை நாயகியாக சித்தரித்து பப்ளிசிட்டி முடுக்கி விடப்பட்டிருப்பதால் தன்னை இரண்டாம் பட்ச நாயகியாக்கி விட்டார்களே என்று அதிருப்தி மனநிலையில் இருக்கிறார் எமிஜாக்சன்.
அதோடு, விஜய்யின் 59வது படத்திலும் சமந்தா இருப்பதால், ஏற்கனவே விஜய்யுடன் கத்தியில் நடித்திருக்கும் அவருக்கே முக்கியத்துவம் கொடுத்து விட்டால் அந்த படத்திலும் நாம் இரண்டாவது நாயகியாக்கப்பட்டு விடுவோமே என்று கலவரத்தில் காணப்படுகிறார் எமி.
இந்த நிலையில், உதயநிதியுடன் நடித்து வரும் கெத்து படத்தைதான் தற்போது அவர் பெரிதாக எதிர்பார்க்கிறார் எமி. ஏற்கனவே தனது முந்தைய படங்களில் நாயகியாக நடித்த ஹன்சிகா, நயன்தாராவுக்கு அவர் நல்ல பப்ளிசிட்டி கொடுத்ததால் இந்த கெத்து படத்தின் மூலம் தனக்கும் பெரிய அளவில் பப்ளிசிட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறாராம் எமி ஜாக்சன்.
மேலும், இந்த படங்களைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திலும் அவருக்கு ஜோடியாக சிங்கிள் ஹீரோயினாக நடிக்கயிருப்பது எமிக்கு இன்னொரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.