இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்திய அளவில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமாக இதுவரை ஷங்கரின் எந்திரன் படம்தான் முதலிடம் வகித்து வந்தது. ஆனால் இப்போது அந்த படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்து பாகுபலி என்ற படத்தை இயக்கியிருக்கிறார் ராஜமவுலி. இந்த படத்தின் படப்பிடிப்பே இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்றிருக்கிறது.
சரித்திர பின்னணி கொண்ட கதை என்பதால், பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் சென்று படமாக்கியிருக்கும் ராஜமவுலி, அந்த காலகட்டத்தை கோடிக்கணக்கில் செட் போட்டு கண்முன் நிறுத்தியவர், சண்டை காட்சிகளுக்காக ஏராளமான குதிரை, யானைகளையும் பயன்படுத்தியிருக்கிறார்.
மேலும், தமிழ், தெலுங்கை முன்வைத்து படம் தயாரிக்கப்பட்டபோதும், தற்போது இந்தியாவில் அதிகமான மக்கள் பேசி வரும் பல மொழிகளிலும் இப்படம் டப் செய்து வெளியிடப்படுகிறதாம். வருகிற 10ந்தேதி திரைக்கு வரும் பாகுபலி படம் ஆந்திராவில் அதிகப்படியான தியேட்டர்களை கைப்பற்றியுள்ளது. அதனால், அதே தேதியில் வெளியாகயிருந்த மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படம் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது.