பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கத்தி படத்தை அடுத்து தற்போது பாலிவுட்டில் முகாமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். மௌனகுரு படத்தின் ரீமேக்காக அகிரா படத்தை இயக்கி வருகிறார். சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிக்கும் 'அகிரா' ஹிந்தி படத்தில் இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகை ராய் லக்ஷ்மி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் வேலைகளில் தற்போது பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
அகிரா பட பணிகள் விரைவில் முடிவடையவிருக்கின்றன. இதனால் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் எது? யார் ஹீரோ? போன்ற கேள்விகள் தற்போது கோலிவுட்டில் விவாதப்பொருளாக மாறி வருகிறது. டெக்னாலஜி சம்பந்தப்பட்ட க்ரைம் த்ரில்லர் கதையைத்தான் தன்னுடைய அடுத்தப்படமாக இயக்கப்போவதாக ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய நட்பு வட்டத்தில் சொன்னதாகவும் ஒரு தகவல்.
அப்படத்திற்காக விஜய், அஜித் இருவரையும் ஏ.ஆர்.முருகதாஸ் அணுகியிருப்பதாக தகவல். தற்போது அட்லி இயக்கும் படத்தில் விஜய்யும், 'வீரம்' சிவா இயக்கும் படத்தில் அஜித்தும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களும் முடிவதற்கு எப்படியும் இந்த வருடக் கடைசியாகிவிடும். அதற்கு முன்பாகவே அஜித் விஜய் இருவரில் ஒருவருக்கு கதையைச் சொல்லி ஓகே வாங்க திட்டமிட்டுள்ளாராம் ஏ.ஆர்.முருகதாஸ். அவரது இயக்கத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.