பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாகியுள்ளது. காலத்தால் அழியாத பல ஆயிரம் பாடல்களை தந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். 87 வயதான விஸ்வநாதன், உடல்நலக்குறைவால் இரு வாரங்களுக்கு முன்னர் சென்னை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வு மற்றும் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஸ்வநாதனின் உடல், கொஞ்சம் கொஞ்சமாக சீரானது. ஆரம்பத்தில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இசையமைப்பாளர் இளையராஜா கூட அவரது உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரித்தார்.
எம்.எஸ்.வி.யின் உடல்நிலை சீரானதால் அவரை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என அவரது குடும்பத்தார் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலை இன்று மீண்டும் மோசமானது. இதனையடுத்து அவர் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். டாக்டர்கள் தொடர்ந்து எம்.எஸ்.வி.யை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.