ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த் திரையுலகில் கடந்த சில மாதங்களில் வெளிவந்த படங்களின் வெற்றியைப் பற்றிப் பார்க்கும் போது ஏதும் டிரென்ட் மாறுகிறதோ என்றுதான் யோசிக்க வைக்கிறது. பாபநாசம், காக்கா முட்டை, டிமான்டி காலனி, 36 வயதினிலே ஆகிய படங்களின் வெற்றியை வைத்துப் பார்க்கும் போது அது உண்மைதான் என்று புரியவைக்கும். மேற் சொன்ன நான்கு படங்களும் பிரம்மாண்டமான தயாரிப்போ அல்லது அசர வைக்கும் அரங்கங்களோ இல்லாமல் ஒரு சாதாரண படமாகவே காட்சியளித்தன. எளிமையான கதை, சொன்ன விதம் ஆகியவை இந்தப் படங்களுக்கு நல்லதொரு வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.
அதே சமயத்தில் பிரம்மாண்டமான படைப்பு என்று விளம்பரப்படுத்தப்பட்டு, பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட எலி, மாஸ், உத்தம வில்லன், ஆகிய படங்களை ரசிகர்கள் ஏற்காததற்கான காரணத்தையும் பார்க்க வேண்டும். இந்தப் படங்களில் ரசிகர்களை வசீகரிக்க வைக்கம் விதத்தில் கதையோ, காட்சிகளே இடம் பெறவில்லை என்பதே உண்மை. அதன் காரணமாகவே இந்தப் படங்கள் தோல்வியடைந்துள்ளன. வடிவேலு, சூர்யா, கமல்ஹாசன் என மூன்று பெரும் நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் கதை என்ற ஒன்று சரியாக இல்லையென்றால் அந்தப் படங்கள் சரிந்து விடும் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணத்தைச் சொல்ல முடியாது.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தமிழ்த் திரையுலத்தில் பிரம்மாண்டம் என்பது எடுபடாமல் போய்விடும் என்றே தோன்றுகிறது.