பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உலக நாயகன் கமலஹாசனின் தீவிர ரசிகர் ஓவியர் ஏ.வி.ஸ்ரீதர். கமலை நூற்றுக்கணக்கான ஓவியமாக வரைந்து வைத்துள்ளார். தற்போது அவர் ஸ்கெட்ச்புக் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி மய்யம் என்ற படத்தை தயாரித்து வருகிறார். மய்யம் என்பது கமலஹாசன் நடத்தி வந்த பத்திரிக்கையின் பெயர். இந்தப் படம் முழுக்க முழுக்க மாணவர்களால் உருவாக்கப்படுகிறது.
படத்தின் இயக்குனர் ஆதித்யா பாஸ்கரன், இசை அமைப்பாளர் கே.ஆர், நடிகர் ஹாஷிம் ஹூசைன் இவர்கள் மூவரும் எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்கள். இவர்கள் தவிர ஒளிப்பதிவாளர் பிர்னாஸ் ஹூசைன், வருணா ஸ்ரீதர், நடன இயக்குனர் ராஜ் லட்சுமி உள்பட 12 பேரும் கல்லூரி மாணவர்கள். இவர்களுடன் ரோபோ ஷங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டி.முருகானந்தம் வசனம் எழுதியுள்ளார்.
"கல்லூரி மாணவர்களை மையப்படுத்தி ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. இதில் பணியாற்றுகிற என்னையும், ரோபோ சங்கரையும் தவிர்த்து மற்ற அனைவரும் கல்லூரி மாணவர்கள். கதையும் கல்லூரி மாணவர்களில் காதல் கலாட்டா தொடர்புடையது. படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சிறிய பட்ஜெட்டில் நிறைய படம் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறேன். திறமையான இளைஞர்களுக்கு எனது தயாரிப்பு நிறுவனம் வாய்ப்பளிக்கும்" என்றார் ஏ.வி.ஸ்ரீதர்.