'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் சேதுபதி நடித்துள்ள இரண்டு படங்கள் தற்போது வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. ஒரு படம் 'இடம் பொருள் ஏவல்', மற்றொன்று விஜய் சேதுபதியின் சொந்தத் தயாரிப்பான 'ஆரஞ்சு மிட்டாய்'. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'இடம் பொருள் ஏவல்' படம் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய படம். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள திருப்பதி பிரதர்ஸ் பெரும் பணக் கஷ்டத்தில் சிக்கியதால் அவர்கள் கமல்ஹாசனை வைத்துத் தயாரித்த 'உத்தம வில்லன்' படத்தையே சொன்னபடி வெளியிட முடியாமல் போனது.
அவர்கள் தயாரித்துள்ள மற்றொரு படமான 'ரஜினி முருகன்' படத்தின் வெளியீட்டுத் தேதியையும் இன்னும் முறைப்படி அறிவிக்காமலே இருக்கிறார்கள். 'இடம் பொருள் ஏவல்' படத்தை ஜுலை மாதம் வெளியிடப் போவதாக கடந்த சில வாரங்களாகவே அறிவித்து வருகிறார்கள். ஆனால், இன்னும் எந்தத் தேதியில் அந்தப் படம் வெளியாகும் என்று தெரிவிக்கவில்லை. இதனிடையே 'ஜிகினா' என்ற படத்தையும் ஜுலை மாதம் வெளியிடப் போவதாக சொல்லியிருந்தார்கள்.
ஒரே மாதத்தில் எப்படி இப்படி அடுத்தடுத்து மூன்று படங்களை வெளியிட முடியும் என கோலிவுட் வட்டாரத்தில் எழுப்புகிறார்கள். அதனால், விஜய் சேதுபதி தானே சொந்தமாகத் தயாரித்து நாயகனாக நடித்துள்ள 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தை ஜுலை 31ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துவிட்டார். இதனால் 'இடம் பொருள் ஏவல்' படத்திற்குத்தான் சிக்கல் எழுந்துள்ளது.
தனக்கு தமிழ் சினிமாவில் சரியான ஏற்றத்தை ஏற்படுத்தி வைத்த சீனு ராமசாமி இயக்கத்தில் அவர் நடித்த 'இடம் பொருள் ஏவல்' படத்தைப் பற்றி விஜய் சேதுபதி கவலைப்படாமல் சொந்தப் படத்தை திடீரென வெளியிடுவதை திரையுலகத்தினரே ஆச்சரியத்தில் பார்க்கிறார்கள். தமிழ் சினிமாவில் இதெல்லாம் சகஜம்தானே என்றும் அவர்களே அடுத்து பதிலளிக்கிறார்கள்.