டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
புதுமுகங்கள் தமிழ், நட்சத்திரா ஜோடி சேர்ந்துள்ள படம் கிடா பூசாரி மகுடி. கிராமத்து கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பதோடு, தனது சொந்த குரலில் ஒரு பாடலும் பாடியிருக்கிறார். மேலும், இந்த படத்தின் நாயகி நட்சத்திரா கதைக்காக நிஜமாலுமே மொட்டை அடித்துக்கொண்டு நடித்திருக்கிறார். அந்த அளவுக்கு கதையை தத்ரூபமாக்க வேண்டும் என்பதற்காக பல வருடங்களாக வளர்த்து வந்த தலைமுடியை தியாகம் செய்திருக்கிறாராம் அவர். இப்படி பலரது முயற்சியில் உருவாகியிருக்கும் கிடா பூசாரி மகுடி படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் இந்த படத்தை இயக்கியிருக்கும் ஜெயக்குமார், இந்த படம் தொடங்கியதில் இருந்து அதை முடிப்பதற்கு தான் பட்ட கஷ்டத்தை சொல்லி கண்கலங்குகிறார். அதாவது இந்த மகுடி படம் இப்போது திரைக்கு வரத்தயாராகி விட்டது. ஆனால் இதை முடிப்பதற்குள் நான் பட்ட கஷ்டம் இருக்கிறதே. அது ஒரு பெண், குழந்தையை பெற்றெடுப்பதற்கு முன்பு எத்தனை வலி, வேதனையை அனுபவிப்பாளோ அதற்கு இணையானது. அவ்வளவு வேதனைக்குப்பிறகுதான் இன்றைக்கு படம் உருவாகியிருக்கிறது என்கிறார் ஜெயக்குமார்.